ஜனவரி 24, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் கடந்த ஜனவரி 24, 2010 அன்று மதரஸா ஆரம்பம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் "மார்க்க கல்வியின்" சிறப்பு பற்றி உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள், அல்ஹம்துலில்லாஹ் !
காலை மற்றும் மாலை நேரங்களில் சிறுவர்/சிறுமிகளுக்கு குர்ஆன் ஓதுதல் பயிற்சி, குர்ஆன் எழுத்து பயிற்சி, சிறிய சூரா மற்றும் துஆ மனப்பாடம் செய்தல், தொழுகை பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.